தொண்டை மண்டலம் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்களைக் தன்னகத்தே கொண்டு நிற்கின்றது. அவற்றுள், காஞ்சீபுரம் மாவட்டம் மிகவும் சிறப்புள்ளதாக திகழ்ந்து வருகின்றது. இக்காஞ்சீபுர மாவட்டத்தில், செங்கல் பட்டு அருகே, பாலாற்றின் கிழக்குக் கரையில் மணப்பாக்கம் என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் என்ற திருக்கோயில் அமைந்திருக்கிறது.
வேதங்களும் சாஸ்த்ரங்களும் “கேசவனை” உயர்ந்தவனாக உத்கோஷிக்கின்றன. “ஸுகந்தபுரம்” அல்லது “மணப்பாக்கம்” என்று அழைக்கப்பட்டு வரும் இந்த திவ்யதேசத்தில் சுமார் 400 ஆண்டுகளாக ஸ்ரீ பூமி நீளா ஸமேதராய் ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், அபய வரத முத்திரைகளுடன்எழுந்தருளி, பக்தர்களை ரக்ஷித்து வருகிறார்.
இக்கிராமத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கன்னியம்மன் கோயிலில் பிரஸித்தியாக வீற்றிருக்கும் ஸப்த கன்னிகைகள் , கேசவப் பெருமாளைப் போற்றி வணங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த க்ஷேத்திரம் “கன்னிகோயில் மணப்பாக்கம்” என்றும் பிரஸித்தி பெற்றுள்ளது.
The temple is in the village of Manapakkam near Chengalpattu on the eastern side of the River Palar bank, and is more than 400 years old.
ஜயது ஜயது ஸ்ரீ பூமிநீளா தேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவப் பரப்பிரம்மணே நம:
மங்களானி பவந்து.
For further details contact:
Sri. V.Rangan (Treasurer)
Sri Aadhikesavaperumal Kainkarya Sabha Thiruppani Committee,
137/60, Luz Church Road,First Floor
Mylapore, Chennai – 600 004
Mobile: +91 94444 20999
E-Mail: aadhikesavaperumal@gmail.com
Sri. D.Rangasamy, President: 98414 81241
Sri. S.Sriramapitchai, Secretary: 94442 05290

